கலை

இந்­திய மர­பு­டைமை நிலை­யமும் ஆனந்தா மரபுக்‌கலைகள் கூடமும் (ஆட்டம்) இணைந்து வழங்கும் ‘நம் மரபு’ தொடரின் ஓர் அங்கமாக, கரகாட்ட கலையையும் தவில் கலையையும் சிங்கப்பூரர்களுக்கு அறிமுகப்படுத்துவதற்கு இந்தியாவிலிருந்து கலைமாமணி தேன்மொழியும் கலைச்சுடர்மணி ராஜேந்திரனும் இங்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.
சிங்கப்பூர் கலை அரும்பொருளகம் தஞ்சோங் பகார் டிஸ்ட்ரிபார்க் வளாகத்தில் செயல்பட்டு வருகிறது. அருங்காட்சியகம் செயல்பட்டுவரும் இடத்தை தற்போதைக்கு மாற்றும் திட்டமில்லை எனக் கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சர் எட்வின் டோங் கலைத்துறைக்கான நாடாளுமன்ற நியமன உறுப்பினர் உஷா சந்திரதாசின் கேள்விக்கு புதன்கிழமை (மே 8) எழுத்துபூர்வமாக பதிலளிக்கும்போது தெரிவித்தார்.
கலை நயமும் கதை வளமும் ஒருசேர ‘நெசவு’ எனும் நாட்டிய நாடகத்தை தத்வா கலைக் குழுவினர் அரங்கேற்றினர். தமிழ்மொழி விழாவின் ஒரு பகுதியாக அலிவால் கலை மையத்தில் ஏப்ரல் 27ஆம் தேதி இந்நிகழ்ச்சி நடைபெற்றது.
முத்தமிழை நவீன பாணியில் சங்கமிக்கச் செய்தது, ராஃபிள்ஸ் கல்வி நிலைய இந்தியப் பண்பாட்டு மன்றத்தின் ‘சங்கமம் 2024’.
சிங்கப்பூரின் முதல் பிரதமர் லீ குவான் யூவின் வாழ்க்கையையும் புகழையும் கொண்டாடும் விதமாக ‘மண்டலா கிளப்’ கலாசார மையம், அவரது சிற்பங்களைக் காட்சிக்கு வைத்துள்ளது.